Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
தயாரிப்பாளர் கில்டு தேர்தல்... ஜாக்குவார் தங்கத்தின் பொற்கால அணி போட்டி
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஜாக்குவார் தங்கம் போட்டியிடுகிறார்.
சென்னை: ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தலைமையிலான பொற்கால அணி போட்டியிடுகிறது.
தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைப் போலவே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கமும் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு தான் கடைசியாக தேர்தல் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு போன்ற காரணங்களால் அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் திரைப்பட மற்றம் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தேர்தல் ஆணையராக நியமித்தது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என பாஷா அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் ஜாக்குவார் தங்கம் தலைமையிலான பொற்கால அணி போட்டியிடுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜாக்குவார் தங்கம், "மிகவும் பழைமை வாய்ந்த இந்த அமைப்பு சிறு தயாரிப்பாளர்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தது. ஐந்தாண்டுகள் கழித்து தேர்தல் நடத்தப்படுவதால் உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாகியுள்ளோம்.
இந்த தேர்தலில் எனது தலைமையிலான பொற்கால அணி அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.