Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மக்கள் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது கொலை வெறிப் பாடல்- ஜாவேத் அக்தர்
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ... இந்தப் பாடல்தான் இன்றைய இளைஞர்களின் வாய் முழுக்க நர்த்தனமாடி வரும் பாடல். தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.
ஆனால் இந்தப் பாடலை ஜாவேத் அக்தர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது, பொருத்தமற்றதாக உள்ளது.
அனைவருமே இந்தப் பாடலை புகழ்கிறார்கள். ஆனால் மன்னர் நிர்வாணமாக நிற்கிறார். மிகச் சாதாரணமான ட்யூன், தரமே இல்லாத பாடல், மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள்.
இந்தப் பாடலின் வெற்றி நான் இதுகாலம் வரை எழுதிய அத்தனை பாடல்களும் குப்பை, உபயோகப்படாதது, உருப்படியில்லாதது என்பது போலாகி விட்டது. இதில் எந்தவிதமான லாஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.
அக்தரின் இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து நிறைய பேர் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.