Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளருக்கு ஜெயச்சித்ரா அல்வா நடிகை ஜெயச்சித்ரா ரூ. 73 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக பிரபல திரைப்பட பைனான்சியர் குல்சந்த் போத்ரா புகார்கொடுத்துள்ளார்.சென்னை செளகார்பேட்டையில் வசித்து வருபவர் போத்ரா. திரைப்படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். நடிகை ரோஜா மீதுஏற்கனவே பண மோசடி தொடர்பாக வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா.இந் நிலையில் சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஒரு புகாரைக் கொடுத்தார் போத்ரா. அதில், நடிகைஜெயச்சித்ரா தனக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தை விற்பது தொடர்பாக என்னை அணுகினார்.அந்தத் தோட்டத்தை நானே வாங்கிக் கொள்வதாக கூறினேன். இதுதொடர்பாக முன் பணம் கொடுத்தேன். நிலத்திற்கானதொகையாக ரூ. 73 லட்சம் பேசப்பட்டது. இந்தத் தொகையை ரொக்கமாக என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜெயச்சித்ரா.பணத்தை பெற்றுக் கொண்ட அவர் நிலத்தை கிரயம் செய்வது தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார்.நானும் போனேன், ஆனால் அவர் வரவில்லை. என்னிடம் விற்பதாக இருந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.எனவே நான் கொடுத்த ரூ. 73 லட்சம் பணத்தை ஜெயச்சித்ராவிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் போத்ரா.
நடிகை ஜெயச்சித்ரா ரூ. 73 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக பிரபல திரைப்பட பைனான்சியர் குல்சந்த் போத்ரா புகார்கொடுத்துள்ளார்.
சென்னை செளகார்பேட்டையில் வசித்து வருபவர் போத்ரா. திரைப்படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். நடிகை ரோஜா மீதுஏற்கனவே பண மோசடி தொடர்பாக வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா.
இந் நிலையில் சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஒரு புகாரைக் கொடுத்தார் போத்ரா. அதில், நடிகைஜெயச்சித்ரா தனக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தை விற்பது தொடர்பாக என்னை அணுகினார்.
அந்தத் தோட்டத்தை நானே வாங்கிக் கொள்வதாக கூறினேன். இதுதொடர்பாக முன் பணம் கொடுத்தேன். நிலத்திற்கானதொகையாக ரூ. 73 லட்சம் பேசப்பட்டது. இந்தத் தொகையை ரொக்கமாக என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜெயச்சித்ரா.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர் நிலத்தை கிரயம் செய்வது தொடர்பாக பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார்.நானும் போனேன், ஆனால் அவர் வரவில்லை. என்னிடம் விற்பதாக இருந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே நான் கொடுத்த ரூ. 73 லட்சம் பணத்தை ஜெயச்சித்ராவிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் போத்ரா.