Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!
தரமான படங்களைத் தரும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது 12-வது படைப்புக்காக மீண்டும் ஜெயம் ராஜா - ரவி கூட்டணியைப் பிடித்திருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஜெயம் ராஜா படம் இயக்குவது இது மூன்றாவது முறை. ஜெயம் ரவி நடிப்பது இரண்டாவது முறை.
ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம் படங்களை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் புதிய படத்துக்காக கடந்த ஆறு மாதங்களாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜெயம்ராஜா!
'ஜெயம்', 'எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி' என இதுவரை ஜெயம் ராஜா இயக்கிய ஐந்து படங்களுமே அதிரடி வெற்றிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், "சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்ஷன் படம். ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய படமாக இது அமையும்", என்றார்.