Don't Miss!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- News
காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!

தரமான படங்களைத் தரும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது 12-வது படைப்புக்காக மீண்டும் ஜெயம் ராஜா - ரவி கூட்டணியைப் பிடித்திருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஜெயம் ராஜா படம் இயக்குவது இது மூன்றாவது முறை. ஜெயம் ரவி நடிப்பது இரண்டாவது முறை.
ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம் படங்களை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் புதிய படத்துக்காக கடந்த ஆறு மாதங்களாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜெயம்ராஜா!
'ஜெயம்', 'எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி' என இதுவரை ஜெயம் ராஜா இயக்கிய ஐந்து படங்களுமே அதிரடி வெற்றிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், "சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்ஷன் படம். ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய படமாக இது அமையும்", என்றார்.