Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!
தரமான படங்களைத் தரும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது 12-வது படைப்புக்காக மீண்டும் ஜெயம் ராஜா - ரவி கூட்டணியைப் பிடித்திருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஜெயம் ராஜா படம் இயக்குவது இது மூன்றாவது முறை. ஜெயம் ரவி நடிப்பது இரண்டாவது முறை.
ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம் படங்களை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் புதிய படத்துக்காக கடந்த ஆறு மாதங்களாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜெயம்ராஜா!
'ஜெயம்', 'எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி' என இதுவரை ஜெயம் ராஜா இயக்கிய ஐந்து படங்களுமே அதிரடி வெற்றிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், "சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்ஷன் படம். ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய படமாக இது அமையும்", என்றார்.