Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிமிர்ந்து நில் இனி வீரநடை போடும்... ஜெயம் ரவி நம்பிக்கை
சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள நிமிர்ந்து நில் படம் நிச்சயம் வீரநடை போட்டு வெற்றிகளை குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அப்படத்தின் நாயகனான ஜெயம் ரவி.
ஜெயம் ரவி-அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்ந்து நில்' படத்தை 'நாடோடிகள்' பட இயக்குநர் சமுத்திரகனி இயக்கியுள்ளார். இசை ஜீ.வி.பிரகாஷ். நேற்று முந்தினம் வெளியாக இருந்த இப்படம் ஒரு சில காரணங்களால் தாமதமாக நேற்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி படத்தை வெளியிட ஏற்பட்ட சிரமங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
சினிமாவுல இதெல்லாம் சகஜம்...
இது யாருக்குமே கடினமான ஒன்றுதான். எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தங்கள் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களை வெளியிடும் சமயத்தில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவது சகஜம்.
முயற்சி...
நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். சிரமங்கள் கடினமாக செல்ல செல்ல நாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி...
இந்த கடினமான சூழ்நிலையில் நான் என்னுடைய நண்பர்கள், திரைத்துறை கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
வீரநடை ...
‘நிமிர்ந்து நில்' இனி வீரநடை போடும்' என இவ்வாறு ஜெயம் ரவி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.