Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆரவ் ஹீரோவாகும் படத்தை நான் தான் இயக்குவேன்: ஜெயம் ரவி
மகனின் படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன் மகனின் முதல் படத்தை தான் தான் இயக்குவேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
சக்கி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'டிக் டிக் டிக்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில், ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் மோகன் ராஜா, படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் மதன் கார்கி மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "டிக் டிக் டிக் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எங்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருந்தது. அது வீண்போகவில்லை.
இந்த பட வெற்றியின் மூலம், இனி இதுபோன்ற முயற்சிகளை தைரியமாக எடுக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதற்காக இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனை பாராட்டுகிறேன்.
எனக்கும் என் மகனுக்காகவும் குறும்பா பாடலை கொடுத்த இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்கி ஆகியோருக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பெற்றிருக்கிறேன். குறும்பா பாடலை இதுவரை நான் 2 ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருப்பேன்.
என் மகன் தொடர்ந்து நடிப்பானா என எனக்கு தெரியாது. ஆனால் அவன் ஹீரோவாகும் படத்தை நான் தான் இயக்குவேன். எனவே ராஜா அண்ணன் என்னை மன்னிக்க வேண்டும். என் அண்ணன் இல்லாமல் நான் இங்கு இல்லை", இவ்வாறு அவர் தெரிவித்தார்.