Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது மிருதன் குழு!
மிருதன் படத்தின் வெற்றி, அந்தக் குழுவை மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைத்திருக்கிறது.
ஆம், அந்தப் படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஜெயம் ரவி சம்மதித்துள்ளார். இந்தப் படத்துக்கான கதையை ஒரே நாளில் முடிவு செய்துவிட்டாராம் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில் தயாரான மிருதன் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் தயாரான ரத்தக்காட்டேரி வகைப் படம் இது என்பதால் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்த வரவேற்பைப் பார்த்த அந்தப் படக்குழு மீ்ண்டும் ஒரு புதிய படத்துக்காக இணைகிறது.
இந்தப் புதிய படத்துக்கான கதையைக் கேட்ட ஜெயம் ரவி, ஒரே நாளில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்த முறையும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய கதையுடன் களமிறங்கப் போகிறார்களாம்.
‘மிருதன்' படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். சக்தி சௌந்தரராஜன் இயக்கவிருக்கிறார். கதாநாயகி தேடுதல் படலம் நடக்கிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.