Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் இணையும் பூலோகம் படத்தின் கூட்டணி!.. ஆகஸ்டில் தொடங்கும் படப்பிடிப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி.
தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து சரிவர அதனை நடித்து ரசிகர்களை ஈர்ப்பவர் ஜெயம் ரவி.
தற்போது ஜெயம் ரவி "பூலோகம்" படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்... அடுத்தடுத்த படங்களால் ஹாப்பி
நம்பிக்கை அளிக்கிறது
ஜெயம் ரவி நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த பூமி சோபிக்காமல் போன நிலையில் ஜெயம் ரவியின் வரவிருக்கும் படங்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன, மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என ஜெயம் ரவியின் லைன் அப் நம்பிக்கை அளிக்கிறது.
மிச்சம் உள்ளது
இதில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துள்ளது. ஜன கன மன படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாகப்படவுள்ளன அதனால் அந்த படத்தின் பணிகள் நிலுவையில் உள்ளது. ஜன கன மன படத்தின் இயக்குனர் அஹ்மத் உடன் மற்றொரு படம் ஜெயம் ரவி பண்ண உள்ளதாகவும் பேசப்படுகிறது.
இயக்குனர் கல்யாண்
2015-ம் ஆண்டு கல்யாண் - ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான "பூலோகம்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வட சென்னை பகுதியில் பரம்பரை , பரம்பரையாக கலக்கிய பாக்ஸர்கள் பற்றியது பூலோகம் திரைப்படம். இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ள இந்த படம் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
படத்தின் நாயகி
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத நடுவில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது. இந்த படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!