Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'இரும்புத்திரை' பிரபலத்துடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி...29 வது பட அப்டேட்
சென்னை : ஜெயம் ரவி கடைசியாக 'பூமி' படத்தில் நடித்திருந்தார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். இந்த படத்தை லட்சுமண் எழுதி, இயக்கி இருந்தார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பேனரில் சுஜாதா விஜயக்குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.
தொடர்ந்து டைரக்டர் அகமது இயக்கும் 'ஜன கன மன' படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தில் டாப்சி பன்னு ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் முக்கிய கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்து திரும்பிய ஜெயம் ரவி, 'பூலோகம்' படத்தை இயக்கிய டைரக்டர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் த்ரில்லர் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் ஜெயம் ரவியின் 29 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'இரும்புத்திரை' படத்திற்கு கதை எழுதிய ஆன்டனி முதல் முறையாக இயக்கும் படம் ஒன்றில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தையும் ஹோம் மூனி மேக்கர்ஸ் பேனரில் சுஜாதா விஜயக்குமார் தயாரிக்க உள்ளார். ஜூலை மாத இறதியில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.