Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தேவஸ்தானமே குழப்பத்திற்குத் காரணம்: ஜெயமாலா
ஐயப்பன் கோவில் கருவறைக்குள் என்னை கோவில் நிர்வாகிகள்தான் கூட்டிச்சென்றனர். விதிறையை அவர்கள் மீறாமல் இருந்திருந்தால் இந்த சர்ச்சைஎழுந்திருக்காது என்று நடிகை ஜெயமாலா சபரிமலை கோவில் தேவஸ்தானம் மீதுபுகார் கூறியுள்ளார்.
ஐயப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்த சுவாமி விக்கிரகத்தைத் தொட்டுவணங்கினேன் என்று நடிகை ஜெயமாலா கூறியுள்ளது கேரளாவில் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது.
ஆனால் தான் கூறியதில் எந்த மாற்றம் இல்லை என்று ஜெயமாலா மீண்டும்கூறியுள்ளார். இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், இந்த தேவையற்ற சர்ச்சையினால் நான் மிகவும் வேதனைஅடைந்துள்ளேன்.
இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்டு என்னை அமைதியாக வாழ விட வேண்டும்.கோவில் நிர்வாகம்தான் இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டது.
நான் கோவில் நிர்வாகத்திற்கு பேக்ஸ் மூலம் அனுப்பிய கடிதத்தை அவர்கள்தான்வெளிப்படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளனர். நான் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுஅனுப்பிய கடிதம் அது. அந்தக் கடிதத்தை வெளியிடக் கூடாது, உடனடியாக அழித்துவிட வேண்டும் என்று கோரியிருந்தேன்.
ஆனால் அதை மீறி அவர்கள் வெளியிட்டுள்ளனர். உண்மையில் நெருக்கடியில் சிக்கிநான் கோவில் கருவறைக்குள் செல்லவில்லை. மாறாக முக்கியப் பிரமுகர்கள்செல்லும் பாதை வழியாக என்னை கோவில் நிர்வாகத்தினர்தான் அழைத்துச்சென்றனர்.
இதுதான் உண்மை. அவர்கள் விதிமுறையைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் என்னைஏன் நுழைய அனுமதிக்க வேண்டும். எனவே தவறு அவர்கள் பக்கம்தான் உள்ளது.
பணத்துக்காகவும், விளம்பரத்திற்காகவும் நான் இப்படி கூறுவதாகவும், எனக்குப்பைத்தியம் பிடித்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஐயப்பனின் உண்மையானபக்தையான எனக்கு இது மிகவும் வேதனை அளிக்கிறது.
தெரியாமல் செய்து விட்ட தவறுக்காக பரிகாரம் செய்யத் தயாராக இருக்கிறேன்.எனக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்
போவதாக கூறியுள்ளனர்.
அதுகுறித்து நான் கவலைப்படவில்லை அனைத்தையும் ஐயப்பனிடம் விட்டுவிட்டேன். அவருக்கு உண்மை எது என்று தெரியும். எனக்கு ஐயப்பன் நீதிவழங்குவார் என்றார் ஜெயமாலா.