Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஜெயமாலா மகளும்... 'தூதன்' ஜீவனும்!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்க வருகிறார். முன்னாள் கன்னடத்து அழகுக் கிளி ஜெயமாலாவின் மகள் செளந்தர்யாதான் இதில் அவருக்கு ஜோடி சேருகிறார்.
செல்வா இப்படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 27வது படம். ஏற்கனவே ஜீவனை வைத்து நான் அவனில்லை படத்தை இயக்கியவர்தான் செல்வா.
இருவரும் தற்போது 3வது முறையாக ஒன்று சேருகிறார்கள்.
தூதன்
இப்படத்திற்கு தூதன் என்று பெயர் வைத்துள்ளனர். பிரபல நடிகர்களை வைத்து பல படங்களின் தயாரித்தவர் வி.சுந்தர் அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளார். அவர்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சன் மூன் பிக்சர்ஸ்
அவர் சன் மூன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.
ஜெயமாலா மகள்
ஜெயமாலாவின் மகள் செளந்தர்யா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு விசிட் அடிக்கிறார். தமிழில் இதுதான் அவரது முதல் படமாகும்.
கன்னடத்தில் கலக்கியவர்தான்
ஆனால் இதற்கு முன்பு கன்னடத்தில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் ஏற்கனவே கலக்கியவர்தான் செளந்தர்யா.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்....
"உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம் -
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ - வாழலாம் என்கிற என்.ஜி.ஆர்.பாடி நடித்த பாடல் வரிகளேயே கதைக்களமாக்கி இருக்கிறேன் என்று படம் பற்றி ரத்தினச்சுருக்கமாக சொல்லி முடித்தார் செல்வா.