Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மொட்டை தலையுடன் ஆழ்வார்க்கடியான் வேடத்தில் ஜெயராம்..பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
சென்னை : மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த வேடத்திற்காக ஜெயராம் மொட்டை அடித்துக்கொண்டு, பின் மண்டையில் குடுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் பயணத்தில் நான்...பெருமை கொள்ளும் பிரகாஷ் ராஜ்
அந்த புகைப்படத்தில் , ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் மொட்டைத் தலையுடன் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
வரலாற்று நாவல்
எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக இயக்க உள்ளார். இது மணிரத்னத்தின் கனவு திரைப்படமாகும். இந்த கதையை திரைப்படமாக எடுக்க எண்ணிய பலர் தோல்வியைத் தழுவினர். மணிரத்னத்தின் தீவிர முயற்சியால் இக்கதை திரைப்படமாக உருவாகி வருகிறது.
முக்கிய வேடத்தில்
இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. வரலாற்றுத் திரைப்படம் என்பதால் கதாபாத்திர தேர்வு மிகவும் கடுமையாகவே இருந்தது. சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி,விக்ரம், ரியாஷ் கான், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
வந்தியத்தேவன்
இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி கதாபாத்திரத்திலும், த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் இருவேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆழ்வார்க்கடியான்
இந்நிலையில் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். அதாவது, வைணவ சாமியாரின் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். இவர் சோழர்களுக்காக உளவு பார்ப்பவராக கதை நெடுகிழும் வருவார். இந்த வேடத்திற்காக ஜெயராம் மொட்டை அடித்துக்கொண்டு, பின் மண்டையில் குடுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகி உள்ளது.
பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்ற தகவலை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.