Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2 ஆண்டு காதல், 32 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்திய நடிகை ஜெயசுதா, நிதின்
மும்பை: நிதின் கபூரும், நடிகை ஜெயசுதாவும் 2 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
நடிகை ஜெயசுதாவின் கணவரும், தயாரிப்பாளருமான நிதின் கபூர் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிதின் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினர் ஆவார்.
காதல்
ஜெயசுதாவும், நிதின் கபூரும் இரண்டு ஆண்டுகள் காதலித்தனர். அதன் பிறகு கடந்த 1985ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நிஹார் மற்றும் ஸ்ரேயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயசுதா
முன்னதாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயசுதா கூறுகையில், நிதினை பார்த்த நாளே அவரது அழகு என்னை கவர்ந்தது. அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. ஆனால் இது கண்டதும் காதல் இல்லை என்றார்.
நிதின்
ஜெயசுதா பற்றி நிதின் முன்பு கூறியதாவது, நானும், அவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் ஸ்பார்க் எல்லாம் இல்லை. ஆனால் நாங்கள் மும்பை மற்றும் சென்னைக்கு இடையே பயணம் செய்யத் துவங்கியபோது தான் ஒருவரையொருவர் மிஸ் செய்ததை உணர்ந்தோம் என்றார்.
மரணம்
நிதின் கபூரின் மரணத்தால் பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிதினை இழந்து வாடும் ஜெயசுதா மற்றும் மகன்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.