Don't Miss!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
குடிபோதையில் கசின் சிஸ்டரை பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகர் மீது வழக்கு
சிம்லா: தனது கசின் சிஸ்டரை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியுடன் சேர்ந்து ஹிம்மத்வாலா சூப்பர் ஹிட் படத்தில் நடித்ததால் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததாக தெரிவித்தவர் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா.
தற்போது 75 வயதாகும் அவருக்கு ஏக்தா கபூர் என்ற மகளும், துஷார் கபூர் என்ற மகனும் உள்ளனர்.
துஷார்
ஏக்தா தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பாலிவுட் படங்களை தயாரித்து வருகிறார். துஷார் கபூர் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். துஷாருக்கு மகன் உள்ளார்.
புகார்
ஜிதேந்திரா குடிபோதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரின் கசின் சிஸ்டர் சிம்லா போலீசாரிடம் இமெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் தனது கைப்பட கடிதம் எழுதியும் அனுப்பியுள்ளார்.
உறவுக்கார பெண்
ஜிதேந்திராவுக்கு 28 வயது இருக்கும்போது சிம்லாவில் நடந்த ஷூட்டிங்கிற்கு தன்னை வரச்சொல்லி இரவில் குடித்துவிட்டு வந்து ஹோட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சிம்லா
1971ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தின்போது தனக்கு 18 வயது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். 47 ஆண்டுகள் கழித்து அந்த பெண் அளித்த புகார் குறித்து போலீசார் ஜிதேந்திராவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
பொய்
கசின் சிஸ்டரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று ஜிதேந்திரா மறுத்துள்ளார். இது ஆதாரமற்ற, வதந்தி. இதில் உண்மை இல்லை என்று ஜிதேந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.