Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அருள்நிதியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா: ஜிப்சிக்கு அப்புறம் இது தான்
சென்னை: அருள்நிதியும் ஜீவாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு தேவையான நடிப்பை திறம்பட வழங்கக் கூடியவர் ஜீவா. இவர் தற்போது அருள்நிதியுடன் நடிக்க உள்ளார்.
பல நல்ல படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அருள்நிதி அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி என்னும் நான்' எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பரத் நீலகண்டன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல் ஜீவாவுக்கு, 'கீ' என்ற த்ரில்லர் படமும், 'கொரில்லா' என்ற நகைச்சுவை படமும் வெளியாக உள்ளன. ராஜுமுருகனின் ஜிப்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.