Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பண்ணைப்புரம் தோட்டத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா உடல் அடக்கம்
இறுதிச் சடங்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், மலையாளத் திரையுலகினர் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அகால மரணமடைந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகமடைந்தனர். நேற்று இளையராஜாவின் வீட்டில் குவிந்த திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் ஜீவாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பிற்பகலுக்கு மேல் ஜீவாவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நேற்று நள்ளிரவைத் தாண்டி பண்ணைப்புரத்திற்கு உடல் வந்து சேர்ந்தது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை உடல் அடக்கம் நடைபெற்றது. பண்ணைப்புரம் அருகே உள்ள லோயல் கேம்ப்பில் உள்ள தோட்டத்தில், இளையராஜாவின் தாயார் சின்னத்தாயின் சமாதிக்கு அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தி இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இளையராஜாவின் சிறு பிராயத்து நண்பரான பாரதிராஜவும் உடன் இருந்தார். இளையராஜா குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் எனபலரும் கலந்து கொண்டனர். பின்னர் ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜாவின் சகோதரி மகள்தான் ஜீவா. ராஜாவுக்கும், ஜீவாவுக்கும் 1970ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் ஜீவா. சாகாவரம் படைத்த பல பாடல்களை இளையராஜா சுதந்திரமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் ஜீவா.
இந்த நிலையில் ஜீவாவின் திடீர் மரணம் அவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரை நிலை குலைய வைத்துள்ளது. மூன்றும் பேரும் தாயாரின் மரணத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். அதேபோல இளையராஜாவும் பெரும் துக்கத்தில் உள்ளார். இருப்பினும் துக்கத்தை அடக்கிக் கொண்டு அவர் நேற்று முழுவதும் தனது மனைவியின் உடல் அருகிலேயே இருந்தார்.