Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கவலை வேண்டாம்' ஜீவா!
விண்ணைத்தாண்டி வருவாயா', ‘கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள்', யாமிருக்க பயமே உள்ளிட்ட வித்தியாசமான படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் அடுத்து தயாரிக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு கவலை வேண்டாம் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவனம் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ', ‘யான்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இப்படத்தை ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிந்த ‘யான்' படத்தையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. நீண்டகால தயாரிப்பில் இருந்த அப்படம் வெளிவந்து சரிவர வெற்றியடையவில்லை. இயக்குநர் ரவி கே சந்திரன் தங்களை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.
ஜீவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிப் படம் தர, யாமிருக்க பயமே இயக்குநரை நாடியுள்ளது இந்த நிறுவனம்.