ரத்னசிவா எந்த ஹீரோக்கும் கதை சொல்லி ஓகே பன்னுவார் என்றார் ஜீவா
சென்னை : நடிகர் ஜீவா நடிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சீறு .இந்த படத்தை ஐசரிகணேஷ் தயாரித்து இருக்கிறார் .இந்த படத்தில் ஜீவா ,ரியா சுமன் ,வருன் ,நவ்தீப் ,காயத்ரி கிருஷ்னா மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .
இந்த படம் டிசம்பர் வெளியாவதாக முன்னர் அறிவிக்கபட்டு இருந்தது .சில காரணங்களுக்காக தள்ளி வைக்கபட்டு தற்போது பிப்ரவரி 7 ரீலிஸாக உள்ளது .இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது .இதில் பேசிய ஜீவா சில படங்களில் வந்து பத்திரிகையாளர்களின் முன்னிலையில் உட்காரும் போது சின்ன தடுமாற்றம் இருக்கும் படம் சரியாக வரவில்லை என்ன செய்வது என்ற பதட்டமும் அதனுடன் இருக்கும் .ஆனால் சீறு படத்தை பொருத்த வரையில் தோல்வி பற்றிய பயமே இல்லை படம் சிறப்பாக வந்திருக்கிறது என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜீவாவின் கடந்த படங்களின் நிலையை பற்றி ஜீவா தற்போது வெளிப்படையாக பேசியிருப்பதும் சீறு படத்தை பற்றி மிகவும் சரியான அளவில் பேசியிருப்பதும் பாராட்டை பெற்றிருக்கிறது .
சீறு படத்தை இயக்குனர் ரத்னசிவா இயக்கி இருக்கிறார் .இவர் றெக்க படத்தை இயக்கிய இயக்குனர் .இவர் கதை சொல்லும் விதம் நடிகர்களை எழுதில் கவர்ந்து விடும் எந்த நடிகராக இருந்தாலும் இவர் கதை சொல்லும் விதத்தில் ஒகே சொல்லி விடுவார்களாம் அந்த அளவுக்கு நேர்த்தியான கதை சொல்பவர் ரத்ன சிவா என விழாவின் போது ஜீவா புகழ்ந்தார்.



சீறு படத்தின் மற்றொரு சிறப்பம்சம் முதல்முறையாக தமிழில் நவ்தீப் வில்லனாக அறிமுகமாகிறார் அதையடுத்து வளர்ந்து வரும் நடிகர் வருனும் இதில் மற்றொரு வில்லனாக நடித்து இருக்கிறார் .இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது இதனால் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது .சீறு படம் வரும் பிப்ரவரி 7 வெளியாகும் என படக்குழு உறுதியளித்து இருக்கிறது .


Click it and Unblock the Notifications











