Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழுக்கு வரும் மல்லிகா ஷெராவத்.. ஜீவனின் 'பாம்பாட்டம்' படத்தில் இளவரசியாமே!
சென்னை: ஜீவன் இரட்டை வேடத்தில் நடிக்கும் பாம்பாட்டம் படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது என்று படக்குழு கூறியுள்ளது.
Recommended Video
காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா உட்பட சில படங்களில் நடித்தவர் ஜீவன்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் படம்.. ராணா, சாய் பல்லவியுடன் இணைந்த நிவேதா பெத்துராஜ்!
இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு, பாம்பாட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மல்லிகா ஷெராவத்
கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி என்ற கேரக்டரில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இதற்கு முன் தமிழில் கமலின் தசாவதாரம் படத்தில் நடித்திருந்த மல்லிகா, பிறகு சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
ஃபிலிம் கார்டன்
பாம்பாட்டம் படத்தை தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கிறார்.
அம்ரேஷ் இசை
ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரேஷ் இசை அமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதுகின்றனர். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையாம் இது.
வரலாற்றுக் கதை
கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறும்போது, 'வரலாற்றுக் கதையை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து உருவாக்குகிறேன். மிகப்பெரிய கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்று இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார்கள்.
முக்கிய காட்சிகள்
மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளோம். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற இடங்களில் 120 நாட்கள் நடைபெற இருக்கிறது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக படம் இருக்கும் என்கிறார்.