Don't Miss!
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எப்படி வந்தது ரூ 450 கோடி சொத்து? - ஜெகனுக்கு நடிகை ஜீவிதா கேள்வி
தெலுங்கு தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருந்த நடிகர் ராஜசேகர் நடிகை ஜீவிதா தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தனர். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ராஜசேகர ரெட்டிக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகியதும் அவரது அணியில் இருந்தனர். அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவரும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இருந்து விலகப் போவதாக திடீரென அறிவித்தனர்.
நடிகர் ராஜசேகர் ஜீவிதா இருவரும் தெலுங்குதேசம் கட்சியில் சேர திட்டமிட்டிருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ராஜசேகர் ஜீவிதா இருவரும் ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அவர்கள் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் எங்களுக்கு உரிய மரியாதை இல்லை. எங்களை ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது. இதனால் நாங்கள் இருவரும் அக்கட்சியில் இருந்து விலகுகிறோம். விரைவில் நாங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வேறு கட்சியில் சேருவது பற்றி முடிவு எடுப்போம்.
ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 4 ஆண்டுகளுக்குள் ரூ.450 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளார். இவ்வளவு சொத்துக்களை குறுகிய காலத்தில் எப்படிக் குவித்தார்? இதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியுமா? இதற்கு விசாரணை அவசியம்," என்றனர்.
தங்களது அரசியல் எதிரியான சிரஞ்சீவி காங்கிரஸில் இணைவதால், ராஜசேகரும் ஜீவிதாவும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.