செல்ல மகளை பார்க்காமலேயே இறந்து போன ஸ்ரீதேவி
Recommended Video

சென்னை: செல்ல மகளை பார்க்காமலேயே இறந்துவிட்டார் ஸ்ரீதேவி.
நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி அம்மா செல்லம். அம்மா இல்லாமல் இருக்க மாட்டார்.
இதை ஸ்ரீதேவியே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

ஜான்வி
என் இளைய மகள் குஷி துணிச்சலான பெண். தன்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். ஆனால் மூத்த மகள் ஜான்விக்கு எல்லாத்துக்கும் நான் வேண்டும் என்று ஸ்ரீதேவி பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

திருமணம்
ஜான்வி தடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். அந்த படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அவர் ஸ்ரீதேவியுடன் துபாய் செல்லவில்லை.

மரணம்
இளைய மகள் குஷி தான் ஸ்ரீதேவியுடன் துபாய் சென்றார். முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜான்வி அன்பு அம்மாவின் மரண செய்தி அறிந்து இடிந்து போய்யுள்ளார்.

பிடிக்கும்
அம்மா, அம்மா என்று எப்பொழுது பார்த்தாலும் ஸ்ரீதேவியை சுற்றி வந்த ஜான்வி துயரம் தாங்க முடியாமல் உள்ளார். எதுவாக இருந்தாலும் முதலில் அம்மாவிடம் ஓடிப் போய் சொல்லும் ஜான்வி இனி என்ன செய்யப் போகிறாரோ என்று பாலிவுட்காரர்கள் பரிதாபப்படுகிறார்கள். தனக்கு தாயாக இருப்பதே மிகவும் பிடித்த விஷயம் என்று ஸ்ரீதேவி அடிக்கடி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











