Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை ஜியா கான் மரணம்: அமெரிக்காவை தலையிடச் சொல்லும் அம்மா
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் மரணத்தை கொலை என்ற கோணத்தில் பார்க்க போலீசார் மறுத்துவிட்டதாக அவரது தாய் ராபியா தெரிவித்துள்ளார். இதனால் அவர் அமெரிக்காவின் தலையீட்டை அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜியா அமெரிக்க குடிமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவருடைய அம்மா ராபியா ஜியா கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து போலீசாரிடம் சில ஆதாரங்களையும் அளித்தார். இந்நிலையில் ஜியாவின் மரணம் தற்கொலை தான் கொலை அல்ல என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ராபியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அமெரிக்கா
ஜியாவின் மரணம் கொலை என்ற கோணத்தில் விசாரிக்க போலீசார் மறுத்திவிட்டனர். ஜியா அமெரிக்க குடிமகள் என்பதால் அவரது மரணம் குறித்த விசாரணையில் உதவி செய்யுமாறு நான் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளேன்.
இமெயில்
எனக்கு அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு இமெயில் வந்தது. அதில் அமெரிக்கா ஜியா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இந்தியாவுக்கு பரிந்துரைத்து எழுதப்பட்ட கடிதம் இருந்தது. இதை நான் உள்ளூர் அதிகாரிகளிடம் அளிப்பேன்.
எஃ.ப்.பி.ஐ.
நான் அமெரிக்க உதவியை கேட்ட பிறகு வந்த முதல் இமெயிலில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் எஃப்.பி.ஐ. அதிகாரி ஒருவர் அமெரிக்க தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயார் என்று இந்திய போலீசாருக்கு கடிதம் எழுத சம்மதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆலோசனை
அமெரிக்காவுக்கு வெளியே நடக்கும் வழக்கை எஃப்.பி.ஐ. விசாரிக்க முடியாது என்பதால் உங்கள் மகளின் வழக்கில் ஆலோசனை வழங்க முடியும். அதுவும் இந்திய சட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் தான் என்று அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார்.