Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்னை ஏமாத்திட்டே, நான் போறேன்: நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்க கடிதம்
மும்பை: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும், காதல் தோல்வியாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அவர் நட்சத்திர தம்பதி ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்து வந்தார். தற்கொலை செய்யும் முன்பு அவர் கடைசியாக சூரஜ்ஜுடன் தான் செல்போனில் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜியா சாகும் முன்பு தன் கைப்பட 6 பக்க கடிதத்தை எழுதி வைத்திருந்ததை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடிதத்தை அவர்கள் நேற்று போலீசாரிடம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் ஜியா கூறியிருப்பதாவது, நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நம் உறவை கண்டுகொண்டதே இல்லை. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் இந்த உலகிலேயே இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.