Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தி "ஜிகர்தண்டா" தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே திடீர் மோதல்!
சென்னை: 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருந்த நிலையில் தற்போது சிலபல பஞ்சாயத்துக்கள் படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் இடையே எழுந்துள்ளது.
ஜிகர்தண்டா படம் தயாரித்த போதே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும்இடையே முட்டலும் மோதலுமாக இருந்தது படத்திற்கு யூ சர்டிபிகேட் வேண்டுமென்றால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சாரில் சொன்னபோது அறவே முடியாது என்று மறுத்து விட்டார் கார்த்திக்.
யூ சர்டிபிகேட் கிடைக்காததால் வரிவிலக்கில் கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் லாபம் போய்விட்ட வருத்தத்தில் இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் தற்போது அதற்கு பழிவாங்கி விட்டார்.
ஹிந்தி பட ரீமேக் உரிமையை கார்த்திக் சுப்புராஜிற்கு தெரியாமல் சில கோடி ரூபாய்க்கு விற்று விட்டார். இதைத் தெரிந்து கொண்ட கார்த்திக் அதில் 40% ராயல்டி கேட்க, தர முடியாது என்று தகராறு செய்கிறாராம் தயாரிப்பாளர்.
படத்தின் கதை கார்த்தியுடையது எனவே அவருக்கு தெரியாமல் படத்தை விற்க முடியாது, விற்றாலும் அவருக்கு உள்ள ராயல்டியானது கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறாராம் கார்த்திக் விரைவில் இது தொடர்பாக பஞ்சாயத்து நடக்கலாம் என்று கோலிவுட்டில் சொல்கின்றனர்.