Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பா. ரஞ்சித் படத்தில் நடிக்கும் மோடியின் 'சிம்ம சொப்பனம்' ஜிக்னேஷ் மேவானி
சென்னை: பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்க உள்ளார் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி.
ஒரு எம்.எல்.ஏ. படத்தில் நடிப்பது பெரிய விஷயமா என்று கேட்டால் இல்லை ஆனால் ஜிக்னேஷ் மேவானி நடிப்பது நிச்சயம் பெரிய விஷயம். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இளைஞர் தான் இந்த ஜிக்னேஷ் மேவானி.
அப்படிப்பட்டவர் தமிழ் படத்தில் நடிக்கிறார்.
ஜிக்னேஷ்
பா. ரஞ்சித் தற்போது காலா படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் இயக்க உள்ள படத்தில் குஜராத் மாநிலத்தில் தலித்துகளுக்காக போராடும் ஜிக்னேஷ் மேவானி நடிக்கிறார்.
கோலிவுட்
ஜிக்னேஷ் மேவானி ரஞ்சித்தின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். ஜிக்னேஷ் அண்மையில் சென்னைக்கு வந்தபோது ரஞ்சித்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள்
குஜராத்தில் மோடிக்கு சிம்ப சொப்பனமாக இருந்த ஜிக்னேஷ் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பது கோலிவுட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்தை துவங்கும் முன்பே அது குறித்து ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டுள்ளது.
மோடி
குஜராத் சட்டசபை தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஜிக்னேஷ் மேவானி. அந்த தொகுதியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.