ஏங்க? எதுக்கு இந்த கொலைவெறி? கொந்தளித்த கே.வி.ஆனந்த்
சென்னை: ஜீவாவை நேரடியாக பார்த்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
ஜீவாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் மீண்டும் ஜீவாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஜீவாவின் படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவுவதால், தன்னுடைய அடுத்த படத்திலிருந்து கே.வி.ஆனந்த் அவரை நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் எதுக்கு இந்தக் கொலைவெறி? நான் ஜீவாவை நேரடியாக பார்த்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
மேலும் ஜீவா என்னுடைய விருப்பமான நடிகர்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications