Don't Miss!
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜிப்ஸி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பட்டையை கிளப்பிய ராஜுமுருகன்
Recommended Video
சென்னை:ஜீவா நடித்து வரும் ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஜோக்கர் படத்தை அடுத்து ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மிஸ் இமாச்சல பிரதேசம் பட்டம் வென்ற நடாஷா சிங் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஜிப்ஸி
ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. போஸ்டர்களை பார்த்தாலே ராஜுமுருகன் இந்த படத்திலும் தனது முத்திரையை பதித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெறுவார் என்பது தெளிவாக தெரிகிறது.
பயணம்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்க்கும்போது ஜீவா ஊர், ஊராக சுற்றித் திரியும் வாலிபர் என்பது புரிகிறது. பயணத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு பிரேக் கிடைக்காமல் இருக்கும் ஜீவாவுக்கு இந்த படம் நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன்
ஜிப்ஸி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஜிப்ஸி என்பது பயணம் பற்றிய கதை. இந்த படத்திற்காக ஜீவா சார் நீளமான முடி வளர்த்துள்ளார். மேலும் கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டுள்ளார். படம் முழுக்க அவருடன் குதிரை வரும் என்கிறார் ராஜு முருகன்.
சமூக பிரச்சனை
ஜிப்ஸி படத்திற்கு லொகேஷன் பார்க்க நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். காஷ்மீர், டெல்லி மற்றும் பல நகரங்களில் நாடோடிகளை பார்த்தேன். அவர்களிடம் இருந்து சில விஷயங்களை எடுத்துக் கொண்டேன். இந்த படத்தில் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளோம் என்று ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.