Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. பாலாவை வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்.. வேற லெவல் செய்கை!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இப்போ மொத்தம் 13 பேர் தான் இருக்காங்க என்பதே, இந்த வரிசைப் பட்டியல் வந்த பிறகு தான் தெரிகிறதே..
அந்த அளவுக்கு 60 நாட்கள் ஆகியும் இன்னமும் கூட்டம் குறையாமல் நிறைந்திருக்கிறது.
பாலா தனக்கு டாப் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக யாரையும் மதிக்காமல் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ஜித்தன் ரமேஷ் எழுந்து பேசி பாலாவின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கினார்.
சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்!
பாலாவின் பேராசை
டாப் 3 இடங்களில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என நினைத்த பாலாஜி முருகதாஸ், தனது கருத்து என்றும், அதன் படி தான் போட்டியாளர்களை தேர்வு செய்து வரிசைப்படுத்த வேண்டும் என்றும் தனக்கு சாதகமான பாயின்ட்டுகளை அடுக்கிக் கொண்டு இருந்தார்.
யார் பேச்சையும் கேட்கல
மேலும், ஆரி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் என யார் பேச்சையும் கேட்காமல், தனக்கு தேவையானதை மட்டுமே அடுக்கிக் கொண்டிருந்தார் பயில்வான். பாலாவின் பிளானை நன்றாக அறிந்து கொண்ட ஜித்தன் ரமேஷ், இது தப்பு பாலா, மத்தவங்க சொல்றதையும் கேளுங்க என அட்வைஸ் பண்ணார்.
டென்ஷனான ஜித்தன்
ஆனால், பாலா கேட்காமல் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததும் ஜித்தன் ரமேஷ் கடுப்பாகி விட்டார். நீ உனக்கான நியாத்தை மட்டுமே பார்க்காத, மத்தவங்க சொல்றதையும் கேளு என ஜித்தன் ரமேஷும் பாலாவிடம் எகிறி பேச ஆரம்பித்ததும், பாலா அப்படியே ஆடிப் போய் ஆஃப் ஆகி விட்டார்.
நைட்டெல்லாம் அந்த மனுஷன்
நீ பாட்டுக்கு அடுத்தவனை பேச விடாமல், குற்றச்சாட்டுகளை மட்டுமே அடுக்கி வச்சுட்டு போயிட்ட, நைட்டெல்லாம் அந்த மனுஷன் தூங்கவே இல்லை.. எப்படி புலம்புனாருன்னு தெரியுமா என ஆரி பட்ட மன சங்கடத்தை எடுத்து சொன்ன இடத்தில் ஜித்தன் ரமேஷ் செம ஸ்கோர் செய்தார்.
நீ கலக்கு தல
பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் வீட்டில் பண்ணும் அட்டூழியங்களுக்கு இப்படித் தான் திருப்பிக் கேட்டு ஆஃப் பண்ணனும், நீ கலக்கு தலை என்றும், வாண்ணா.. வாண்ணா.. இப்படியொரு ஜித்தன் ரமேஷை தான் கேம்ல எதிர்பார்க்குறோம். அந்த பயில்வானை சும்மா விடாத என சமூக வலைதளங்களில் ஜித்தனுக்கு செம ஃபேன் பேஸ் அதிகரித்து விட்டது.