Don't Miss!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராஜாதி ராஜா... தெலுங்கில் வெற்றி பெற்ற சேரன் படம்!
சேரனின் இயக்கத்தில் உருவாகி, நீண்ட காலமாக திரையைத் தொட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, தெலுங்கில் ராஜாதி ராஜா என டப் செய்யப்பட்டு கடந்த 24-ம் தேதி ரிலீஸானது.
ஆச்சர்யம்... படத்துக்கு நல்ல வரவேற்பு. சுமார் 250 திரையரங்கில் வெளியிடப்பட்ட இந்தப் படம் வெற்றியையும், சேரனுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்துள்ளது.
இங்கே நீண்ட நாட்களாக வெளியிட முடியாமல் இருந்து, இரண்டு முறை தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்போது டப்பிங் படமாக வெளியாகியுள்ள ராஜாதி ராஜாவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதை தெலுங்கு சினிமா ஆச்சர்யமாகப் பார்க்கிறது.
சர்வானந்த் - நித்யா மேனன் ஜோடியும் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
தெலுங்கில் சர்வானந்த் ஏற்கனவே இரண்டு ஹிட்களைக் கொடுத்து, இப்போது மூன்றாவது ஹிட் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சேரன் அவரது ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை தமிழில் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார். ஏற்கனவே டிவிடியாக வெளியிடப்பட்டிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் கூட, "இது நல்ல படம், இன்னும் நிறைய பேர் பார்க்கவில்லை. எனவே, மக்கள் பார்க்க தயாராக இருப்பார்கள். இப்போது சேரனுக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரி செய்ய அது உதவும்," என முன் வந்துள்ளனர்.
ஜுலை 15 ம் தேதி அளவில் இப்படத்தை வெளியிடலாம் என்று சேரனும் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் கபாலி வெளியாவது உறுதியானால், ஒரு வாரம் கழித்து வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம்.