இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா ரித்தீஷ்?: மனோபாலா
Recommended Video

சென்னை: இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா என்று நண்பன் ஜே.கே. ரித்தீஷ் மறைவு பற்றி ட்வீட் செய்துள்ளார் நடிகர் மனோபாலா.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 46 வயதே ஆன ரித்தீஷ் இப்படி திடீர் என்று இறந்தது திரையுலக பிரபலங்கள், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நிஜமாகவே இறந்துவிட்டீர்களா, எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் செய்வாரே என்று தான் பலரும் சமூக வலைதளங்களில் அவரை பற்றி பேசுகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் மனோபாலா ரித்தீஷ் பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அன்பு நண்பரே..இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா..கொடுமை.. என்றார்.
46 வயதில் 3 குழந்தைகளை விட்டுவிட்டு இப்படி சென்றுள்ளது கொடுமை தான். ரித்தீஷ் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்ததை பற்றி தான் பலரும் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











