Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தப்பாட்டக் கலைஞனுக்கும், ஒப்பாரி பெண்ணுக்கும் காதல்... ஜேகே ரித்தீஷ் தயாரிக்கும் படம்!
தப்பாட்டம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராகியுள்ளார் நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ்.
நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலராலும் நன்கு அறியப்பட்டவரான ஜே.கே.ரிதீஷ், தனது தயாரிப்பு நிறுவனம் சாகியா செல்லுலாய்ட்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா, மீண்டு வந்தார்களா என்பதை திரைக்கதையாக்கி இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் முஜிபூர்.
"மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையும் இப்படம் ஆணித்தனமாக கூறும்படி இருக்கும். இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1980 பிண்ணனிகளில் நடக்கும்படியாக கதை இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும்படியாக அமையும்," என்று கூறுகிறார் இயக்குநர் முஜிபூர். இவர் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோரிடன் பணியாற்றியவர். இதற்கு முன் "இரு நதிகள்" எனும் படத்தை இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக புதுமுகம் துரை சுதாகர் நடிக்கின்றார். இவர் நிலா புரோமோட்டர் நிறுவனத்தின் தலைவர். தப்பாட்ட கலைஞரான இந்த கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார்.
கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இப்படித்தின் இயக்குநர் முஜிபூர், துளசி ரூபி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோயில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் வேளையில், படக்குழுவினர் இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிட மும்முரமாக செயல்ப்பட்டு வருகின்றனர்.