Don't Miss!
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'கும்கி' புகழ் ஜோ மல்லூரி சகோதரர் மரணம்...நேரில் சென்று ஆறுதல் கூறிய பாரதிராஜா!
சென்னை: எழுத்தாளரும், நடிகருமான ஜோ மல்லூரியின் சகோதரர் இறப்புக்கு இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
பாரதிராஜாவின் உதவியாளர், எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முகங்களுடன் வலம்வந்த ஜோ மல்லூரி பிரபு சாலமனின் 'கும்கி' மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
சமீபத்தில் வெளிவந்த 'காக்கா முட்டை' படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவர் நடிப்பில் அடுத்ததாக திருநாள் படம் வெளியாகவுள்ளது. இதில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருக்கிறார்.
தனது நடிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரத்தால் சந்தோஷமாக வலம்வந்த ஜோ மல்லூரியின் வாழ்வில், தற்போது துயரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அவரின் சகோதரர் கஷ்மீர் ராஜா(ஹோமியோபதி மருத்துவர்) மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார்.இதனையறிந்த ஜோ மல்லூரி உடனடியாக சொந்த ஊரான ராயப்பட்டிக்கு(தேனி) விரைந்து சென்றார்.
திரையுலக நண்பர்கள் ஜோ மல்லூரியிடம் துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜோ மல்லூரி குருவாக மதிக்கும் இயக்குநர் பாரதிராஜா அவரின் வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் கூறியிருக்கிறார்.