அப்பா அம்மா மட்டுமில்ல.. பாலாஜியும் பக்கா குடிகாரராம்.. புட்டு புட்டு வைக்கும் ஜோ மைக்கேல்!
சென்னை: பாலாஜி முருகதாஸ் குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தொழில் அதிபர் ஜோ மைக்கேல்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் பாலாஜி முருகதாஸ். மிஸ்டர் இந்தியா உட்பட பல ஆணழகன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ள பாலாஜி முருகதாஸ், டைசன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

குடிகாரர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அனுபவங்களை கண்ணீர் மல்க உருக்கமாக கூறினார். அப்போது, தனது அம்மாவும் அப்பாவும் குடிகாரர்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அம்மாவும் குடிப்பார்
அதோடு தனது அம்மா ஒரு நாளும் பள்ளிக்கு லஞ்ச் சமைத்து கொடுத்ததில்லை என்றும் பல நாட்கள் பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றிருப்பதாகவும் மதிய உணவு கூட இல்லாமல் பட்டினியாக கிடந்ததாகவும் வகுப்பு ஆசிரியை தனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார்.

யாரும் இல்லை
அப்பா குடித்துவிட்டு வந்து இரவில் கேஸ் ட்யூப்பால் கண்டப்படி அடிப்பார் என்றும், அடி வாங்காமல் தப்பிக்க இரவில் தெரு தெருவாக ஓடியிருக்கிறேன் என்றும் கூறினார். நண்பர்கள் உதவியுடன் ஜிம்மில் சேர்ந்ததாகவும், பட்டம் வென்று வந்தபோது கூட அப்பா அம்மா என யாரும் இல்லை என உருக்கமாக கூறினார்.

மொத்த பேரும்..
பாலாஜி முருகதாஸ் பேசிய பேச்சை பார்த்த நெட்டிசன்கள் கண் கலங்கினர். ஆனால் அவர் பேசியதெல்லாம் பொய்யென சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆதாரங்களை வெளியிட்டனர். இதனால் சம்பாதித்த மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

சரக்கு குளியல்
மேலும் பீரிலேயே பாலாஜி முருகதாஸ் குளிக்கும் வீடியோவும் வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அடப்பாவி நல்லவன் மாதிரியே அப்படி பேசினீயே, அவங்களாவது குடிச்சாங்க.. நீ இப்படி சரக்கிலேயே குளிக்கிறீயே என கேட்டு விளாசி வந்தனர்.

அப்பாவும் அம்மாவும்
இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் பாலாஜி முருகதாஸ். அதாவது பல்வேறு அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள ஜோ மைக்கேல், பாலாஜி முருகதாஸ் குறித்து பல்வேறு பகீர் தகவல்களை கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜோ மைக்கேல், பாலாஜி அவருடைய அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக் என்றார்.

குடிபோதையில் விபத்து
தன்னை நல்லா வளர்க்கவில்லை என்றார். ஆமாம், அவர்கள் பாலாஜியை ஒழுங்கா வளர்க்கவில்லை, சரியாக வளர்த்திருந்தால் அவர் குடித்துவிட்டு கார் ஓட்டி ஒரு ஸ்வீக்கி டெலிவரி பாயை மோதியிருக்க மாட்டார். மோதிவிட்டு காரில் இருந்து இறங்கி ஓடியும் இருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











