Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பப்ளிசிட்டி முக்கியமில்லை.. கொரோனாவுக்கு நிதியளித்த பாலிவுட் நடிகர்.. ஆனா வெளியே சொல்லல!
மும்பை: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிபடுவோருக்கு நிதியளித்துள்ளார்.
ஆனால், எவ்வளவு கொடுத்தார், யாருக்கு அளித்தார் என்ற எந்தவொரு தகவலையும் வெளியிட அவர் விரும்பவில்லை.
கொரோனா நிவாரண நிதிக்காக பாலிவுட்டில் அதிகபட்சமாக நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடிகளையும், மும்பை மாநகராட்சிக்கு 3 கோடிகளையும் வழங்கி உள்ளார்.
ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் கொரோனாவை எதிர்த்து போரடி வரும் அரசுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸுக்காக நிவாரணம் அளித்துள்ள நடிகர் ஜான் ஆபிரகாம், அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் மாபெரும் தொகையை கொரோனா நிதியாக அளித்த நடிகர் அக்ஷய் குமாரை பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹா மறைமுகமாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வளவு நிதி அளித்தேன் என்பதை கூற நடிகர் ஜான் ஆபிரகாம் மறுத்துள்ளார்.
இந்த அழகு தெய்வத்தின் அப்பா அம்மாவா இது.. நடிகைக்கு டன் கணக்கில் ஐஸ் வைக்கும் ஃபேன்ஸ்!!
உதவி செய்வது அனைவரது கடமை, அதை சிலர் வெளிப்படுத்தி, பலரையும் ஊக்குவித்து உள்ளனர். ஆனால், தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. தான் செய்யும் உதவி மக்களை சென்றடைந்தால் போதுமானது எனக் கூறியுள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் உண்மையான வீரர்களையும், சூப்பர் ஹீரோக்களையும் இந்த கொரோனா வைரஸ் பரவலால் கண்டிருக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பாய்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தான் இந்த நேரத்தின் ரியல் சூப்பர் ஹீரோக்கள் என்றும் அவர்களை பாராட்டியுள்ளார்.