Don't Miss!
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Automobiles கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- News சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
- Lifestyle சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்!
சென்னை: தமிழக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ்-வை இந்தி தயாரிப்பாளர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தமிழக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்புமணி - அறிவுமணி. இவர்கள் அன்பறிவ் என்ற பெயரில் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகின்றனர்.
ரஜினியின் கபாலி, காலா, மெட்ராஸ், சிங்கம் 3, கே.ஜி.எப், கைதி உட்பட பல படங்களுக்கு இவர்கள் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.
கேஜிஎஃப் படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது இந்தியில் உருவாகும், மும்பை சாகா என்ற படத்துக்கு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றனர்.
இதில் ஜான் ஆபிரகாம், இம்ரான் ஹாஸ்மி, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, மகேஷ் மஞ்சரேக்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை புகழ்ந்துள்ள, தயாரிப்பாளர் சஞ்சய் குப்தா, கேஜிஎஃப் படத்தைப் பார்த்து அன்பறிவ்-வை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். அவர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள். திறமையான இளம் சண்டை இயக்குனர்கள். அவர்களின் ஆக்ஷனில் வேகம் இருக்கிறது.
கபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா!
படத்தில் சண்டைக்காட்சிகள் மிரட்டலாக இருக்கும். பைக் சேசிங் காட்சிகளும் துப்பாக்கிச் சண்டைகளும் இருக்கின்றன. பல கேமராக்களை வைத்து, ஸ்டைலிஷாக இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
காட்சியின்போது ஹீரோ ஜான் ஆபிரகாமுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் நடித்தார்' என்று கூறியுள்ளார் சஞ்சய்.