Don't Miss!
- Finance பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- News தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
விஜய்யின் சச்சின் 2 ஆம் பாகம் வாய்ப்பிருக்கிறாதா..? என்ன சொல்கிறார் இயக்குனர் ஜான் மகேந்திரன்?
சென்னை: விஜய் நடித்து வெளியான சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். இவர் விஜய் சச்சின் படத்தை இயக்கினார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருப்பார்.
நடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
நடிகை பிபாஷா பாசு
அவர் ஜோடியாக ஜெனிலியாக நடித்திருந்தார். வடிவேலு, தாடி பாலாஜி உட்பட பலர் காமெடி ஏரியாவை கவனித்தனர். இன்றளவும் அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் பேசப்படுகிறது. ரகுவரன் உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகை பிபாஷா பாசு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்த, இதன் பாடல்கள் அப்போது வரவேற்பை பெற்றன.
இரண்டாம் பாகங்கள்
கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இந்தப் படம் தெலுங்கில் சச்சின் என்ற பெயரிலும் இந்தியில் கமாண்டி என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டன. விஜய் ரசிகர்கள் இப்போதும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் பற்றி பேசிவருகின்றனர். இதற்கிடையே, பல படங்களின் இரண்டாம் பாகங்கள், தயாரிப்பு லிஸ்டில் இருக்கின்றன. 15 வருடம் கழித்து சச்சின் படத்தின் 2 ஆம் பாகமும் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
விரும்புகிறார்கள்
அதனால், இதன் அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'அந்தப் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். கண்டிப்பாக அப்படியொரு படத்தில் நடிகர் விஜய்யை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நன்றாக இருக்கும்
விஜய், எமோஷனலாக நடிக்கும் படத்தைப் பார்க்க விரும்புகிறேன். அப்படியொரு படத்தை நான் இயக்கினாலும் சரி, வேறு இயக்குனர் இயக்கினாலும் சரி, முதல் ஆளாக தியேட்டரில் போய் பார்ப்பேன். அது நடந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு ஜான் மகேந்திரன் கூறியுள்ளார். இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய், அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.
-
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
-
Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
-
Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி