Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விஜய்யின் சச்சின் 2 ஆம் பாகம் வாய்ப்பிருக்கிறாதா..? என்ன சொல்கிறார் இயக்குனர் ஜான் மகேந்திரன்?
சென்னை: விஜய் நடித்து வெளியான சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன். இவர் விஜய் சச்சின் படத்தை இயக்கினார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் கல்லூரி மாணவராக நடித்திருப்பார்.
நடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
நடிகை பிபாஷா பாசு
அவர் ஜோடியாக ஜெனிலியாக நடித்திருந்தார். வடிவேலு, தாடி பாலாஜி உட்பட பலர் காமெடி ஏரியாவை கவனித்தனர். இன்றளவும் அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் பேசப்படுகிறது. ரகுவரன் உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகை பிபாஷா பாசு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்த, இதன் பாடல்கள் அப்போது வரவேற்பை பெற்றன.
இரண்டாம் பாகங்கள்
கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இந்தப் படம் தெலுங்கில் சச்சின் என்ற பெயரிலும் இந்தியில் கமாண்டி என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டன. விஜய் ரசிகர்கள் இப்போதும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் பற்றி பேசிவருகின்றனர். இதற்கிடையே, பல படங்களின் இரண்டாம் பாகங்கள், தயாரிப்பு லிஸ்டில் இருக்கின்றன. 15 வருடம் கழித்து சச்சின் படத்தின் 2 ஆம் பாகமும் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
விரும்புகிறார்கள்
அதனால், இதன் அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'அந்தப் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். கண்டிப்பாக அப்படியொரு படத்தில் நடிகர் விஜய்யை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நன்றாக இருக்கும்
விஜய், எமோஷனலாக நடிக்கும் படத்தைப் பார்க்க விரும்புகிறேன். அப்படியொரு படத்தை நான் இயக்கினாலும் சரி, வேறு இயக்குனர் இயக்கினாலும் சரி, முதல் ஆளாக தியேட்டரில் போய் பார்ப்பேன். அது நடந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு ஜான் மகேந்திரன் கூறியுள்ளார். இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய், அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.