அசிங்கமாக நடந்து கொண்ட நடிகர் ஜான் விஜய்: ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட மனைவி
Recommended Video

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்ரீ ரஞ்சனியிடம் தனது கணவர் ஜான் விஜய் தவறாக நடந்து கொண்டதற்காக அவரின் மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார்.
கபாலி படத்தில் நடித்த ஜான் விஜய் தனக்கு போன் செய்து போன் மூலம் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி பேசியதாக விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்ரீ ரஞ்சனி ட்விட்டரில் தெரிவித்தார்.
மேலும் கடம் உமா சங்கரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார்.

ஜான் விஜய்
ஸ்ரீ ரஞ்சனி தெரிவித்துள்ள புகார் பற்றி ஜான் விஜய்யிடம் கேட்டதற்கு சாக்கடையில் கல் எறிந்தால் நம் மீது தான் தெறிக்கும் என்றார். இந்த சம்பவம் குறித்து பேசுவது சாக்கடையில் கல் வீசுவது போன்றதால் பேச விரும்பவில்லை என்று ஜான் விஜய் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
நான் மீ டூ பற்றி ட்வீட் போட்ட சிறிது நேரத்தில் ஜான் விஜய்யின் மனைவி என்னை தொடர்பு கொண்டு அந்த சம்பவம் குறித்து கேட்டார். ஜான் விஜய்யின் சார்பில் அவரின் மனைவி என்னிடம் மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பினார். அவரின் இந்த செயலை நான் வரவேற்கிறேன். தற்போது அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீ ரஞ்சனி ட்வீட்டியுள்ளார்.

ஆதாரம்
மீ டூ இயக்கத்திற்காக குரல் கொடுத்து வருபவர்கள் தங்கள் குடும்பத்தார் மீது புகார் வந்தால் பிளேட்டை மாற்றிவிடுகிறார்கள். புகார் தெரிவிக்கும் பெண்ணிடம் ஆதாரம் கேட்பது, அவரை அசிங்கப்படுத்துவது ஆகியவற்றை செய்யும் நிலையில் ஜான் விஜய்யின் மனைவி மன்னிப்பு கேட்டதை பாராட்டியே ஆக வேண்டும்.
புகார்
ஜான் விஜய் மீது ஏற்கனவே பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து பலரும் ஸ்ரீ ரஞ்சனியிடம் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











