தமிழ் மக்களே ரெடியா.. ஜோஷ் (Josh) ஆப் சென்னையில் நடத்தப் போகும் பிரம்மாண்ட JOSH கிரியேட்டர் மீட் அப்
சென்னை: "இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.
இந்த நிலையில்தான் ஜோஷ் (Josh) ஆப் கடந்த 2021 மார்ச் மாதம் ஹைதராபாத் பார்க் ஹயாத் ஹோட்டலில் #LightsCameraJosh சந்திப்பு நிகழ்வை (மீட் அப்) தொடங்கி வைத்தது.
அதனை தொடர்ந்து 2ம் நிகழ்வாக அக்டோபர் 9ம் தேதி குர்கானில் வெகுவிமர்சியாக இந்த #LightsCameraJosh மீட்டப் நிகழ்த்தப்பட்டது.

இந்த #LightsCameraJosh ன் அடுத்த கட்ட மீட் அப் நிகழ்வு விரைவில் தமிழ் மக்களுக்காக சென்னையில் நடக்க உள்ளது. இந்த நிகழ்விற்காக பிரபலமான 100க்கு மேற்பட்ட ஜோஷ் பயனாளர்கள் #LCJTamil க்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
ஜோஷ் தமிழ் கம்யூனிட்டி மூலம் உருவாக்கப்பட்ட இந்த #LCJTamil நிகழ்வு மூலம் பலதரப்பட்ட கலைஞர்கள், திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான மேடை அமைத்து கொடுத்து பிரபலப்படுத்தும்.
தமிழ் மக்களுக்காக சென்னையில் முதன் முறையாக இப்படியொரு மாபெரும் சந்திப்பை நிகழ்த்த ஜோஷ் ஆப் திட்டமிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மக்கள் முடங்கி இருந்த நிலையில், எப்போது வெளியே செல்வோம் பழைய மாதிரி என்று யோசித்து கொண்டிருந்த மக்களை மகிழ்விக்கவே வருகிறது #LCJTamil.
இந்த புத்தாண்டு மட்டுமில்லாமல் பொங்கலையும் JOSH இன் #LCJTamil உடன் உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களுடன் கொண்டாடும் விதமாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஜோஷ் (JOSH) ஆப் சந்திப்பில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும் ஜோஷ் ஆப் பிரபலங்கள் என பலர் சென்னை மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











