வனிதா மேல அனுதாபம் தான் வருது.. குடும்பத்தால் வந்த சிக்கல்.. பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் வனிதா விஜயகுமார். இவரை இணையவாசிகள் வைரல் ஸ்டார் என்று புகழ்ந்து வருகிறார். தற்போது இவர் இணையத்தில் ராபர்ட் மாஸ்டருடன் கையை பிடித்தபடி இருந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இதைப்பார்த்த இணையவாசிகள் வனிதாவிற்கு கல்யாணமா என்றும், பாவம் ராபர்ட் மாஸ்டர் என்றும் இணையத்தில் கமெண்டுகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது, Mr&Mrs' படத்திற்கான போஸ்டர் என்று தெரிந்த போதும், வனிதாவின் திருமண சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இதுகுறித்து பத்திரிக்கையாளர் கே குவாரா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

பாவம் வனிதா: இதுகுறித்து பேசிய சே குவேரா, இந்த விஷயத்தில் சோஷியல் மீடியா பேசுவதை எல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்த சமுதாயத்தில் மனைவி இறந்துவிட்டால், அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், கணவன் இறந்துவிட்டால், அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை தான் இன்றும் உள்ளது. அதற்கு காரணம், அந்த பெண்ணிற்கு இருக்கும் மகளை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவரும் மகளாகத்தான் பார்ப்பாரா? இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது.
பல சிக்கல்கள்: ஆனால், வனிதா விஷயத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது, அவர் எப்படி வளர்க்கப்பட்டார் என்பதை பார்க்க வேண்டும். வனிதாவிற்கும் அவரது பெற்றோருக்கும் சொத்து பிரச்சனை வந்த போது, வனிதா அளித்த பேட்டியில், அந்த வீடு எனக்கு சொந்தம், அந்த வீடு என் உழைப்பில் வாங்கியது என்கிறார். அது மட்டுமில்லாமல், வனிதாவின் முதல் கணவர் விஜயகுமாரின் குடும்பம் குறித்து பல திடுக்கிடும் விஷயத்தை பேசினார். இப்படி வனிதா வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதனால்,பலருக்கு வனிதா மேல் அனுதாபம் தான் வருகிறது.
காரணம் என்ன: முதல் திருமணம் செய்தார் அதுவும் முறிந்துவிட்டது, அடுத்து இரண்டாவது திருமணம் செய்கிறார் அதுவும் ஒத்துவரல, கடைசியில் மூன்றாவதாக திருமணம் செய்தார். கடைசியல் அவர் இறந்தேவிட்டார். வனிதா 4 இல்ல, 50 கல்யாணம் கூட செய்து கொள்ளலாம். ஆனால், பிரிவுக்கு காரணம் என்ன, பணமா ,ஈகோவா எது பிரச்சனைக்கு காரணம் என்று பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு இவன் வேண்டாம், அவன் வேண்டாம் என்று போய் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என்று சே குவாரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











