லிப் கிஸ்ஸால் குடும்பமே பிரிஞ்சுபோச்சு..அவங்க அட்வைஸை கல்வெட்டில் எழுதணும்..நடிகையை விளாசிய பிரபலம்!
சென்னை: தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம்-ரவி -ஆர்த்தி என தமிழ் சினிமாவில் பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். இது குறித்து பேசிய நடிகை திரிஷா, திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிவதை விட திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடலாம் என கூறி இருந்தார்.
இது குறித்து பேசி உள்ள சினிமா பிரபலமான சேகுவேரா, youtube தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், த்ரிஷாவின் இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் ஒரு குடும்பம் பிரிவது என்பது சாதாரண விஷயம் இல்லை, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டால் அதில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டும் தான். குழந்தைகளுக்கு பெற்றோர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோர்கள் தங்கள் சுயநலத்திற்காக பிரிந்து செல்வதைப் பற்றியே நினைக்கக்கூடாது. இது கொஞ்சம் பழைய விஷயமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை, இதை உணர்ந்து அனைவரும் சில விஷயங்களை விட்டுக் கொடுத்தது தான் வாழ வேண்டும் அப்போது தான் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க முடியும்.

குடும்பமே பிரிந்து விட்டது: திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிவதை விட திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவதே மேல் என்று கூறிய த்ரிஷா, அடுத்த சில நாட்களில் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு என்ன செய்தார் தெரியமா? அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு 'லவ் ஃபார் எவர்' என்று பதிவிட்டு இருந்தார். இது ஏற்கனவே லிப் கிஸ் காட்சியால் எரிந்து கொண்டு இருந்த தீயில் எண்ணெய் ஊற்றியது போல ஆகி, ஒரு குடும்பமே பிரிந்து விட்டது பொதுவெளியில் இப்படி ஒரு போட்டோவை போட்டு அந்த குடும்பத்தையே பிரித்தது நியாயமா.
கல்வெட்டில் எழுதுங்கள்: அடுத்தவரின் கணவரின் போட்டோவை போட்டு 'லவ் ஃபார் எவர்' என்று போட்டால் அது எப்படி பார்க்கப்படும். ஏற்கனவே அவர், பற்றி பல விஷயங்கள் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு போட்டோவை போடலாமா? இப்படிப்பட்ட சில செயலால் தான் சில குடும்பங்கள் பிரிகிறது. த்ரிஷா சொல்லிய கருத்து நல்ல கருத்துத்தான் அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால், அறிவுரை கூறும் த்ரிஷா அவர்கள், அதை போகிற போக்கில் தான் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். அதை அவர் கடைபிடிக்க வேண்டும் இந்த கருத்தை புதிதாக கட்டிவரும் நடிகர் சங்கம் கட்டிடத்தின் கல்வெட்டில் எழுதலாம் என்று சேகுவேரா, அடுத்தடுத்த கேள்வியால் த்ரிஷாவிற்கு சரியான பதிலடி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











