மாதம்பட்டி ரங்கராஜ் டூ மச்.. அன்னைக்கு சட்டையை தூக்கி காட்டினாரு.. இன்னைக்கு இப்படியா?
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கருவுற்ற நிலையில், தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜாய் கிரிஸில்டா தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மகளிர் ஆணையத்தின் விசாரணை முடிந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ஜாய் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என்றும், குழந்தைக்கு DNA test எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அந்த அறிக்கை வெளியாகி ஒருமாதத்திற்கு மேலான போதும், மாதம்பட்டி இதுவரை டெஸ்ட் எடுக்க முன் வரவில்லை.

மாதம்பட்டி ரங்கராஜி சேட்டை: இதனால், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை கடந்த ஒரு மாதமாக காணவில்லை. DNA test எடுக்க சொன்னவர் இப்போது தலைமறைவாக உள்ளார். இவரை ஈவண்டில் யாராவது பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும் என பதிவிட்டு இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், வழக்கம் போல ஓய் பொண்டாட்டி நான் சாப்பிட்டேன், ஆபிஸ் கிளம்ப போகிறேன், என் சொல்லிவிட்டு சட்டையை தூக்கி பெல்ட் போட்டுவிட்டேன், சாக்ஸ் போட்டுக்கொண்டேன் என சொல்லிவிட்டு, செல் போனே வெடித்து சிதறும் அளவிற்கு முத்தம் கொடுத்து இருந்தார். அந்த வீடியோவை பலரும் ட்ரோல் செய்த நிலையில் தற்போது ஜாய் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்துவிட்டு... ஓய் பொண்டாட்டி, உன்னை விட நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்றேன் என பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











