Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் கெத்து காட்டிய பிரபல நடிகை.. எச்சரித்து அனுப்பிய நீதிபதி
அபி சரவணனுடனான விவாகரத்து வழக்கில் கவுன்சிலிங்கிற்கு மறுத்த நடிகை அதிதி மேனனை நீதிபதி எச்சரித்துள்ளார்.
Recommended Video
சென்னை: விவாகரத்து வழக்கில் கவுன்சிலிங்கிற்கு மறுத்த நடிகை அதிதி மேனனை நீதிபதி எச்சரித்துள்ளார்.
பட்டதாரி என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது காதலில் விழுந்தனர் அப்பட நாயகன், நாயகியான அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் பற்றிய தகவல் வெளியானால் தங்களது திரையுலக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், அதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சென்னையில் வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ள அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், வீட்டிலிருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கேரளாவிற்கு சென்றுவிட்டதாகவும் அபி சரவணன் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு விளக்கம் அளித்த அதிதி மேனன், 'நான் அவரை காதலித்தேனே தவிர, திருமணம் செய்யவில்லை' எனக் கூறினார்.
இதனால் தங்களுக்கு திருமணம் ஆனதற்கான ஆதாரங்களை அபி சரவணன் வெளியிட்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதுவரை திருமணம் ஆகவில்லை எனக் கூறி வந்த அதிதி மேனன், இதனால் விவாகரத்து கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், மனைவியுடன் சமரசம் செய்து தங்களை சேர்த்து வைத்து புதிதாக வாழ்க்கையை தொடங்க நீதிமன்றத்தை நாடியுள்ளார் அபி சரவணன். இந்த வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் தட்டிக் கழித்துள்ளார் அதிதி மேனன்.
பிகில்.. 18 புள்ளீங்கோ கைது.. அரசையும் போலீஸையும் பாராட்டிய நடிகை.. ஆனாலும் ஒரு இக்கு!
இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிதியும் ஆஜரானார். அவரிடம் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிதி, 'இந்த வழக்கை நான் உயர்நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
அதிதியின் இந்த பேச்சால் கோபமடைந்த நீதிபதி, 'இது எங்களது கடமை. குடும்ப நல நீதிமன்றம் கவுன்சிலிங்கிற்கு பரிந்துரை செய்யும். கண்டிப்பாக சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும்' என எச்சரித்து அனுப்பியுள்ளார்.