ஜூலியுடன் செல்ஃபி எடுப்பதற்காகவே கலைஞர் டிவி நிகழ்ச்சிக்கு வந்த டிசிஎஸ் ஊழியர்
Recommended Video

சென்னை: ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் மேடைக்கு வந்து ஜூலியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. ஜூலின்னா போலி என்று அனைவரும் சொல்லும்படி நடந்து கொண்டார்.
தற்போது அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ரசிகர்
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த டிசிஎஸ் ஊழியரான சத்யா ஜூலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.
செலஃபி
சத்யா ஜூலியுடன் செல்ஃபி எடுக்க விரும்புவதை அறிந்த கலா மாஸ்டர் அவரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மேடைக்கு வந்தவருக்கு கை கொடுத்து வரவேற்றார் ஜூலி.

திட்டு
மேடைக்கு வந்தவரிடம் ஜூலி எதுக்கு உங்களுக்கு பிடிக்கும், நிறைய பேர் அவரை திட்டுகிறார்களே என்று கலா மாஸ்டர் கேட்டார். அதற்கு சத்யாவோ, நான் அவரின் ரசிகன். எனக்கு அவரை பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

புகைப்படம்
சத்யாவின் பதிலை கேட்ட கலா மாஸ்டர் அவரை பாராட்டினார். அதன் பிறகு சத்யா ஜூலியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். இவ்வளவு பெரிய ஸ்டேஜில் வந்து நான் ஜூலியோட ரசிகன் என்று சொல்வதற்கு தனி கட்ஸ் வேண்டும். அதனால் நன்றி சத்யா என்றார் ஜூலி.
கலாய்
போட்டோ எடுத்துகொண்டவர் மைண்ட் வாய்ஸ்! வீட்டுக்கு போன உடனே இந்த கைய அடுப்புல வைச்சு கருக்கிடணும்! என்று ஒருவர் ஜூலியை கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











