Don't Miss!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வலுவாக இருங்கள் உங்களின் சக்தியே மிகப்பெரிய ஆயுதம்… கொரோனாவிலிருந்து மீண்ட ஜூனியர் என்டிஆர் ட்வீட் !
ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதா பிரபல பள்ளி? தீயாய் பரவும் வீடியோ!
மேலும், உங்களின் சக்தியே கொரோனாவை வெல்லும் மிகப்பெரிய ஆயுதம், எனவே வலுவாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
தீவிரமாக
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில கொரோனாவின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் மே மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்திலும் தளர்வுகள் இன்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலர் பலியாகினர்
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரை உலகத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
கொரோனா உறுதி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடந்த 10ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமையில் இருந்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
கொரோனாவிலிருந்து மீண்டார்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக கூறியுள்ளார். அதில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நெகட்டிவ் என்று வந்துள்ளது இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, கிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டிஆர் பிரவீன் குல்கர்னி மற்றும் மருத்துவர் வீரு ஆகியோருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.
பதற்ற படாதீர்கள்
கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளது. ஆனால் இதற்கு நல்ல கவனிப்பு , நல்ல மனநிலையுடன் இருந்தால் இந்த நோயை வெல்ல முடியும். உங்களின் சக்தியே உங்களின் மிகப்பெரிய ஆயுதம், வலுவாக இருங்கள் பதற்ற படாதீர்கள் என்று ஜூனியர் என்டிஆர் அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.