Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
வலுவாக இருங்கள் உங்களின் சக்தியே மிகப்பெரிய ஆயுதம்… கொரோனாவிலிருந்து மீண்ட ஜூனியர் என்டிஆர் ட்வீட் !
ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதா பிரபல பள்ளி? தீயாய் பரவும் வீடியோ!
மேலும், உங்களின் சக்தியே கொரோனாவை வெல்லும் மிகப்பெரிய ஆயுதம், எனவே வலுவாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
தீவிரமாக
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில கொரோனாவின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் மே மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்திலும் தளர்வுகள் இன்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலர் பலியாகினர்
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரை உலகத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
கொரோனா உறுதி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடந்த 10ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமையில் இருந்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
கொரோனாவிலிருந்து மீண்டார்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக கூறியுள்ளார். அதில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நெகட்டிவ் என்று வந்துள்ளது இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, கிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டிஆர் பிரவீன் குல்கர்னி மற்றும் மருத்துவர் வீரு ஆகியோருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.
பதற்ற படாதீர்கள்
கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளது. ஆனால் இதற்கு நல்ல கவனிப்பு , நல்ல மனநிலையுடன் இருந்தால் இந்த நோயை வெல்ல முடியும். உங்களின் சக்தியே உங்களின் மிகப்பெரிய ஆயுதம், வலுவாக இருங்கள் பதற்ற படாதீர்கள் என்று ஜூனியர் என்டிஆர் அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.