Don't Miss!
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வலுவாக இருங்கள் உங்களின் சக்தியே மிகப்பெரிய ஆயுதம்… கொரோனாவிலிருந்து மீண்ட ஜூனியர் என்டிஆர் ட்வீட் !
ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏஆர் ரஹ்மானையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக பேசியதா பிரபல பள்ளி? தீயாய் பரவும் வீடியோ!
மேலும், உங்களின் சக்தியே கொரோனாவை வெல்லும் மிகப்பெரிய ஆயுதம், எனவே வலுவாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
தீவிரமாக
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில கொரோனாவின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் மே மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்திலும் தளர்வுகள் இன்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலர் பலியாகினர்
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரை உலகத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
கொரோனா உறுதி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடந்த 10ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமையில் இருந்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
கொரோனாவிலிருந்து மீண்டார்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக கூறியுள்ளார். அதில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நெகட்டிவ் என்று வந்துள்ளது இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, கிம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டிஆர் பிரவீன் குல்கர்னி மற்றும் மருத்துவர் வீரு ஆகியோருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.
பதற்ற படாதீர்கள்
கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளது. ஆனால் இதற்கு நல்ல கவனிப்பு , நல்ல மனநிலையுடன் இருந்தால் இந்த நோயை வெல்ல முடியும். உங்களின் சக்தியே உங்களின் மிகப்பெரிய ஆயுதம், வலுவாக இருங்கள் பதற்ற படாதீர்கள் என்று ஜூனியர் என்டிஆர் அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.