ஜூனியர் என்டிஆருக்கு கொரோனா பாசிட்டிவ்…. குடும்பத்துடன் வீட்டில் தனிமை !
ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ரசிகர்கள் எதுவும் பதற்றமடைய வேண்டாம் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

தீவிரமாக
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 3 தினங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.

பலர் பலியாகினர்
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரையுலகினர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கொரோனா உறுதி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பயப்பட வேண்டாம்
தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் தானும் தனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் தாங்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











