Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜூனியர் என்டிஆருக்கு கொரோனா பாசிட்டிவ்…. குடும்பத்துடன் வீட்டில் தனிமை !
ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியன் 2 விவகாரத்திற்கு தீர்வு... களத்தில் இறங்கிய கமலஹாசன்
இதுகுறித்து ரசிகர்கள் எதுவும் பதற்றமடைய வேண்டாம் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
தீவிரமாக
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 3 தினங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
பலர் பலியாகினர்
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரையுலகினர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
கொரோனா உறுதி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பயப்பட வேண்டாம்
தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் தானும் தனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் தாங்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.