Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Finance தண்ணி கேன் போட போன இடத்தில்.. Blinkit டெலிவரி ஊழியர் செயலால் CEO ஷாக்..!!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: ஏப்ரல் 24 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்..
- News தருமபுரியில் விட்டதை பிடிக்குமா பாமக? அதிமுகவை முந்தும் சவுமியா அன்புமணி! தந்தி டிவி கணிப்பு
- Automobiles வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
உங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்!
Recommended Video
சென்னை: வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை தமிழில் பேசும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் பயிற்சி வகுப்பு
விளக்கம்
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018 -ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் பல முறை அவர் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார்.
ஆஜாரான விஷால்
இந்நிலையில் நடிகர் விஷால் இன்று மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால், இன்று காலை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஆங்கிலத்தில் பதில்
அப்போது கடந்த சம்மனில் ஏன் ஆஜராகவில்லை என்று நீதிபதி மலர்மதி விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க தொடங்கினார் விஷால்.
தமிழிலேயே பேசுங்கள்
அப்போது குறிக்கிட்ட நீதிபதி மலர்மதி உங்களுக்கு தமிழ் தெரிந்தால் நீங்கள் தமிழிலேயே பதில் கூறலாம் என்று நடிகர் விஷாலுக்கு அறிவுறுத்தினார்.